தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பஞ்சாப்: ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அட்டகாசமான வெற்றி

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் பக்வந்த் மன், 50 ஆயிரம் வாக்குகளைவிடவும் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

News image

பஞ்சாப்: ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அட்டகாசமான வெற்றி

Updated On :10 மார்ச் 2022, 10:54 am

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் பக்வந்த் மான், 50 ஆயிரம் வாக்குகளைவிடவும் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் பக்வந்த் மான், தான் போட்டியிட்ட துரி தொகுதியில், 58,206 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதோடு, பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதல்வர் என்பதையும் உறுதி செய்துள்ளார்.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் 59 இடங்களை வென்றால் ஆட்சி என்ற நிலையில், ஆம் ஆத்மி 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

தேர்தல் முடிவுகள் தெரியவரும் முன்பே, தனது வீட்டில் பெரிய அளவில் கொண்டாட்டங்களை நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிய பக்வந்த் மன், பதவியேற்பு முதல் பல்வேறு விஷயங்களையும் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தான் ராஜ் பவனில் முதல்வராக பதவியேற்கப் போவதில்லை என்றும், பகத் சிங்கின் சொந்த ஊரில்தான் பதவியேற்றுக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிய வந்தபோதே, அவர் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவிட்டார்.

சங்ரூரில் உள்ள தனது இல்லத்தில் ஆட்களை வைத்து ஜிலேபி சுடும் வேலையைத் தொடங்கிவிட்டிருந்தார். பெரிய பெரிய பாத்திரங்களில் ஏராளமான ஜிலேபிகள் செய்ய நேற்றைய தினமே தயாராகிவிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி 3 மணி நிலவரப்படி, பஞ்சாப்பில் 91 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.