ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

உ.பி. தேர்தல்: வாராணசிக்கு படையெடுக்கும் தலைவர்கள்

வாராணசியில் இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

News image

உ.பி. தேர்தல்: வாராணசிக்கு படையெடுக்கும் தலைவர்கள்

Updated On :4 மார்ச் 2022, 6:23 am


வாராணசி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறுதி மற்றும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு, வாராணசியில் இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

தனது மக்களவை தொகுதியான வாராணசியில் இன்று பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இன்று பிற்பகல் 2 மணிக்கு மால்தாஹியா பகுதியில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார் மோடி.

பிறகு அவர் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யவிருக்கிறார். சனிக்கிழமை வரை பிரதமர் மோடி வாராணசியில் தங்கியிருப்பார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா ஏற்கனவே வாராணசியில்தான் உள்ளார். இவருடன் ராகுல் காந்தியும் வாராணசிக்கு இன்று வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இன்று வாராணசிக்கு வந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.