தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ருமேனியாவிலிருக்கும் சுமார் 4,000 இந்திய மாணவர்கள் : சிந்தியா

ருமேனியாவிலிருக்கும் சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியா தெரிவித்துள்ளார்.

News image

ருமேனியாவிலிருக்கும் சுமார் 4,000 இந்திய மாணவர்கள் : சிந்தியா

Updated On :3 மார்ச் 2022, 12:38 pm


புது தில்லி: ருமேனியாவிலிருக்கும் சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியா தெரிவித்துள்ளார்.

ருமேனியாவிலிருந்து காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த ஜோதிராதித்யா சிந்தியா, ருமேனியாவில் தற்போது சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் உள்ளனர். இவர்கள் இன்னமும் 3 நாள்களில் தாயகம் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

புசாரெஸ்ட் பகுதியிலிருந்து இந்தியாவுக்கு புதன்கிழமை 6 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதுபோலவே, வியாழன் மற்றும் வெள்ளியன்றும் தலா 6 விமானங்கள் இயக்கப்படும், அந்த வகையில் புதன்கிழமை மட்டும் 1,300 மாணவர்கள் இந்தியா திரும்பினர் என்றார் மத்திய அமைச்சர்.

மேலும், ஜோதிராதித்யா சிந்தியா, ருமேனியாவில் 2 நாள்கள் தங்கியிருந்து இந்திய மாணவர்களை பத்திரமாக தாயகம் கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபடுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.