தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மோடியின் அறிவிப்பு இளைஞர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது: அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருப்பதன் மூலம் இளைஞர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றிருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

News image

மோடியின் அறிவிப்பு இளைஞர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது: அமித் ஷா

Updated On :14 ஜூன் 2022, 6:52 am

புது தில்லி: நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்களை வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிரப்ப பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருப்பதன் மூலம் இளைஞர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றிருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் புதிதாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணியில் வேலை வாய்ப்பு வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார்.

மத்திய அரசுத் துறைகள், அமைச்சகங்கள் ஆகியவற்றை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசுத் துறைகளிலும், அமைச்சகங்களிலும் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். 

அதன்படி, நாட்டில், மத்திய அரசுப் பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் காலியாக இருக்கும் 10 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, புதிய இந்தியாவின் அடிப்படையே, இளைஞர்களின் சக்திதான். எனவே, அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதற்காகவே பிரதமர் மோடி தொடர்ந்து உழைக்கிறார். மத்திய அரசில் காலியாக இருக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் இளைஞர்களை பணியமர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையும், தைரியமும் கிடைத்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் பிரதமர் மோடி என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.