இந்த சம்பவத்தில் 35 வயதாகும் சதீஷ் குமாருக்கு, அப்பெண்ணை சில ஆண்டுகளாகத் தெரியும். சதீஷ்குமார் தான் ரயில்வேயில் பணியாற்றுவதாகக் கூறி அறிமுகம் செய்துள்ளார். இந்திய ரயில்வேயில் அப்பெண்ணுக்கும் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளார். கணவரிடமிருந்து பிரிந்து விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அப்பெண் சதீஷ்குமாருடன் செல்லிடப்பேசியில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு விருந்து கொடுப்பதாக தில்லிக்கு வரவழைத்து புது தில்லி ரயில் நிலையம் அழைத்து வந்து அங்கிருக்கும் பராமரிப்பு ஊழியர்களுக்கான குடிசையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.