திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

வறட்சியை சந்தித்துவந்த தெற்கு ஈரானில் திடீர் வெள்ளம்: 17 பேர் பலி

ஈரானில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு பாரஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாக அரசு தொலைக்காட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

News image

ta22kuru_2207chn_9_4

Updated On :23 ஜூலை 2022, 8:53 am


ஈரானில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு பாரஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாக அரசு தொலைக்காட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்துவந்த ஈரானில் திடீர் பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

கனமழையால் எஸ்தாபன் நகரின் ரௌபால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக நகர ஆளுநர் யூசப் கரேகர் தெரிவித்தார். 

திடீர் வெள்ளத்தில் சிக்கிய 55 பேரை மீட்புக் குழுக்கள் மீட்டதாகவும், குறைந்தது 6 பேர் காணவில்லை என்றும் கரேகர் கூறினார். 

ஆற்றுப்படுகைகளுக்கு அருகில் உள்ள கட்டடங்கள் மற்றும் சாலைகள் பரவலாகக் கட்டப்பட்டுள்ளதால் திடீர் வெள்ளத்தினால் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரானின் சில பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை கணித்துள்ளது. 

2018, மார்ச் மாதத்தில், பார்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 44 பேர் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.