புது தில்லி: நாட்டில் முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வெறும் 19 நாள்களில், புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில், பல முன்னேறிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா பல சாதனைகளைப் படைத்து, உருமாறிய ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவினாலும் கரோனா மூன்றாம் அலையின் தீவிரம் குறைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.
கரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டபோது, வீடுகளுக்குள் ஒளிந்து கொண்ட பொதுமக்களிடையே, தற்போது முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருப்பதும், பல விழிப்புணர்களினால் கிடைத்த பலன் என்றும் கூறலாம்.
ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் இணை நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு ஜனவரி 10, 2022 அன்று முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது.
இத்திட்டம் தொடங்கப்பட்டு வெறும் 19 நாள்களில், இதுவரை ஒரு கோடிப் பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோவின் இணையதளத்தின் புள்ளிவிவரப்படி, வெள்ளிக்கிழமை 3 மணியளவில் 1,02,90,374 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 30.80 லட்சம் பேர் சுகாதாரத் துறையினர், 32.72 லட்சம் பேர் முன்களப் பணியாளர்கள் என்றும், 39.88 லட்சம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 15 - 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு இதுவர 4.43 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 164.44 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


