இந்த ஒரு சம்பவம்தான் உடனுக்குடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால், இந்த நிலை அங்கிருக்கும் பல கிராமங்களில் தொடர்கதையாக உள்ளது. வெகு தொலைவிலுள்ள, வனக்கிராமங்கள், மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நேரிடும் இதுபோன்ற அனுபவங்கள் மிகவும் கவலைக்கொள்ளத் தக்கதுமற்றும் அபாயகரமானது. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ வசதியோ, மகப்பேறு வசதியோ, செவிலியர்களோ, ஆம்புலன்ஸ் சேவையோ, இதர மருத்துவ வசதிகளோ கிடைப்பதேயில்ல். ஆனால், எந்த அரசும் அவர்களைக் கண்டுகொள்வதில்லை என்கிறார் மகாராஷ்டிர மாநில முன்னாள் எம்எல்ஏ.