சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

'மாமா, எங்க அப்பாவுக்கு ஓட்டு போடுங்க..' அயோத்தியில் ஒலிக்கும் குரல்

வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் காயத்ரி பாண்டே, வாக்களிக்கக் கூட இன்னமும் தகுதிப்பெறவில்லை.

News image

'மாமா, எங்க அப்பாவுக்கு ஓட்டு போடுங்க..' அயோத்தியில் ஒலிக்கும் குரல்

Updated On :27 ஜனவரி 2022, 12:57 pm


அயோத்தியா: வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் காயத்ரி பாண்டே, வாக்களிக்கக் கூட இன்னமும் தகுதிப்பெறவில்லை. ஆனால், அவர் தனது தந்தைக்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரது தேர்தல் பிரசாரத்தை கிராம மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். அவர்களுக்கு நல்ல வரவேற்பும் கொடுக்கிறார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியா தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் பவன் பாண்டேவின் ஏழு வயது மகள் காயத்ரி பாண்டே. இவருக்கு இன்னும் ஓட்டுப் போடும் வயது கூட ஆகவில்லை. ஆனால், தனது தந்தையுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தினமும் காலையில் எழுந்து, அந்த சின்னஞ்சிறு சிறுமி, தனது தந்தையுடன் புறப்பட்டுவிடுகிறார். வீடு வீடாகச் சென்று தனது தந்தை மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரத்துக்கு உதவி செய்கிறார். விரைவாக தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு ஆன்லைன் வகுப்புக்காக ஓடோடி வந்து விடுகிறார் காயத்ரி.

ஒவ்வொரு வீடாகச் சென்று, அங்கே நிற்பவர்களைப் பார்த்து, "மாமா, என் அப்பாவுக்கு வாக்களியுங்கள். ஆகிலேஷ் ஐயா முதல்வரானால் உங்களது அனைத்துப் பிரச்னைகளும் சரியாகிவிடும்" என்கிறார் மழலை மாறாத குரலில்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.