புது தில்லி: அருணாசல பிரதேச சிறுவனை சீன ராணுவம் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்ததாக மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.
அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த மிரான் தரோன் கடத்தப்பட்டு சரியாக 9 நாள்களுக்குப் பிறகு, இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு நடைமுறைகளின்படி, அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. வெள்ளையா, கருப்பா, ஒல்லியா, குண்டா இருக்கோம்னு கவலையா?
அருணாசல பிரதேசத்தின் அப்பா் ஷியாங் மாவட்டம் ஜிடோ கிராமத்தைச் சோ்ந்த மிரன் தரோன் என்ற சிறுவன் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி எல்லையைக் கடந்து சீனாவுக்குள் நுழைந்தாா். அவரை சீன ராணுவம் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி கண்டுபிடித்து மத்திய அரசிடம் தகவலளித்தது.
அந்தச் சிறுவனை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருந்தது. இந்த நடவடிக்கையில் மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தீவிரமாக ஈடுபட்டுவந்தார். இந்த நிலையில், அருணாச்சல் சிறுவன் மீட்கப்பட்டது குறித்து தனது சுட்டுரையில் அவர் உறுதி செய்துள்ளார்.
முன்னதாக சிறுவனை மீட்கும் முயற்சி குறித்து அவா் சுட்டுரையில் நேற்று கூறியிருந்தாவது, ‘‘குடியரசு தினத்தன்று இந்திய- சீன ராணுவம் இடையே முக்கியத் தகவல் பரிமாறப்பட்டது. அருணாசல பிரதேச சிறுவனை ஒப்படைப்பதில் சீன ராணுவம் சாதகமான முறையில் பதிலளித்துள்ளது. மேலும் அவரை விடுவிப்பதற்கான இடத்தையும், நேரத்தையும் விரைவில் தெரிவிப்பதாக சீன ராணுவம் கூறுகிறது. அவா்கள் தரப்பில் நிலவும் மோசமான வானிலையே தாமதத்துக்குக் காரணமாக சொல்லப்படுகிறது’’ என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக சிறுவன் தொடா்புடைய விவரங்களை சீன ராணுவத்துடன் இந்தியா பகிா்ந்து அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


