மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

உ.பி.: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அமைச்சரின் மகன்; அதுவும் எவ்வளவு தெரியுமா?

பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான அனில் ஷர்மாவின் மகன், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

News image

உ.பி.: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அமைச்சரின் மகன்; வைரலான விடியோ

Updated On :26 ஜனவரி 2022, 7:07 am


புலந்த்ஷஹர்: உத்தரப்பிரதேச அமைச்சரும் ஷிகார்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான அனில் ஷர்மாவின் மகன், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து அமைச்சரிடம், தேர்தல் நடத்தும் அதிகாரி அடுத்த 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பலராலும் பரப்பப்பட்டு வரும் இந்த விடியோவில், ஷர்மாவின் மகன் குஷ் ஷர்மா, ஒரு வாகனத்தில் வந்து கொண்டே, வாக்காளர்களுக்கு 100 ரூபாயைக் கொடுக்கிறார். அப்போது பின்னணியில் டிரம்ஸ் வாத்தியம் இசைக்கிறது. 

இது குறித்து பாஜக தரப்பில் கூறுகையில், பணம் வாங்கியவர்கள் அனைவரும் இசைக் கலைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.