நாட்டின் 73-ஆவது குடியரசு நாளையொட்டி தில்லியில் நடைபெற்ற கோலாகல நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார்.
அதையடுத்து நாட்டின் ராணுவ வலிமை, கலாசார பன்முகத்தன்மை ஆகியவற்றைப் பறைசாற்றும் வகையில் ராஜபாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதையும் படிக்க.. உத்தரகண்ட் தொப்பி, மணிப்பூர் துண்டு அணிந்து வந்த பிரதமர் மோடி
இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 5,000 முதல் 8,000 பார்வையாளர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இதில் கட்டுமானப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களின் சேவையைப் பாராட்டும் வகையில், சிறப்பு விருந்தினர்களாகக் கருதப்பட்டு, இவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 73-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குக் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையேற்றார். அவா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பாதுகாப்புப் படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
வழக்கமாக குடியரசு நாள் விழாக் கொண்டாட்டங்கள் ஜனவரி 25-ஆம் தேதி தொடங்கும். ஆனால், நடப்பாண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த நாள் ஆண்டு கொண்டாடப்படுவதால், ஒருநாள் முன்னதாக ஜனவரி 24-ஆம் தேதியில் இருந்தே குடியரசு நாள் கொண்டாட்டங்கள் தொடங்கின.
குடியரசு நாள் விழாவையொட்டி ராஜபாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. அவை ராணுவத்தின் வலிமை, நாட்டின் பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் நடைபெற்றன.
குடியரசு நாள் விழா கொண்டாட்டங்களை நாடுமுழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் நேரலையில் பார்த்து மகிழ்ந்தனர. பிரசாா் பாரதி சார்பில் 360 டிகிரியில் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் இரு கேமராக்களும் நிறுவப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


