கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பேருந்துப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: குருகிராமில் புதிய வசதி

பேருந்து நிலையங்களில் ஒளிர் திரைகளில் வெளியிடும் புதிய திட்டம் குருகிராமில் அறிமுகமாக உள்ளது.

News image
பேருந்துப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: குருகிராமில் புதிய வசதி
Updated On :1 பிப்ரவரி 2024, 8:14 am

IANS


குருகிராம்: ரயில் இத்தனை மணிக்கு இந்த நடைமேடைக்கு வந்து சேரும் என்ற அறிவிப்பைப் போல, இந்தப் பேருந்து இத்தனை மணிக்கு இந்த பேருந்து நிறுத்தத்துக்கு வந்தடையும் என்ற தகவலை, பேருந்து நிலையங்களில் ஒளிர் திரைகளில் வெளியிடும் புதிய திட்டம் குருகிராமில் அறிமுகமாக உள்ளது.

குருகிராமில் பேருந்துகள் நிறுத்தத்தில், இந்த வசதி உருவாக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, பொதுப் போக்குவரத்தில் 100 சிறிய பேருந்துகளின் நேரங்கள் இந்த ஒளிரும் எண்ம பலகையில் வெளியிடப்பட உள்ளது.

குருகிராமில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், ஹரியாணா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர்  மூல்சந்த் ஷர்மா அறிவித்தார்.

விரைவில், இது மெட்ரோ பகுதியிலிருந்து குருகிராமுக்கு வரும் பேருந்துகளின் சேவைக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், பயணிகளின் வசதிக்காக எண்ம பலகைகள் விரைவில் பேருந்து நிறுத்தங்களில் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.