மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

குடும்ப வன்முறை: மருமகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு தர பாஜக தலைவருக்கு உத்தரவு

ஆந்திர மாநில முன்னாள் பாஜக தலைவர் கன்னா லஷ்மிநாராயணா, அவரது மனைவி மற்றும் மகனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image

குடும்ப வன்முறை: மருமகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு தர பாஜக தலைவருக்கு உத்தரவு

Updated On :20 ஜனவரி 2022, 10:12 am


விஜயவாடா: குடும்ப வன்முறையின் கீழ் வழக்குப் பதிவு செய்த பெண்ணுக்கு ரூ.1 கோடி இழப்பீடு தருமாறு ஆந்திர மாநில முன்னாள் பாஜக தலைவர் கன்னா லஷ்மிநாராயணா, அவரது மனைவி மற்றும் மகனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜயவாடா முதன்மை கூடுதல் தலைமை நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மருமுகள் ஸ்ரீலஷ்மி கீர்த்திக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், கீர்த்தி மற்றும் அவரது மகள் தங்குவதற்கு தங்கும் வசதி செய்து கொடுக்குமாறும் தவறும்பட்சத்தில் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.50,000 வழங்குமாறும் முன்னாள் அமைச்சர், அவரது மனைவி கன்னா விஜயலஷ்மி, மகன் கன்னா நாகராஜூவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், குடும்ப வன்முறையால் காயமடைந்த கீர்த்தி மற்றும் அவரது மகளின் மருத்துவ சிகிச்சைக்காகவும் ரூ.50,000 வழங்குமாறும் உத்தரவில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

கன்னா நாகராஜூவுக்கும் கீர்த்திக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு மகள் பிறந்த நிலையில், தற்போது, தனது கணவர் மற்றும் கணவர் வீட்டார் மீது கீர்த்தி குடும்ப வன்முறை வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.