சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தில்லியிலிருந்து நல்ல செய்தி சொன்ன சுகாதாரத் துறை அமைச்சர்

மும்பையில் கரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியிருக்கிறது. அதுபோல தில்லியிலும் விரைவில் குறையும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image

தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்

Updated On :12 ஜனவரி 2022, 5:58 am


புது தில்லி: மும்பையில் கரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியிருக்கிறது. அதுபோல தில்லியிலும் விரைவில் குறையும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து தில்லியில் தற்போது கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அது குறையத் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுக்க கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று உச்சமடைகிறதா அல்லது குறைகிறதா என்பது தெரியாமல், கரோனா உறுதி செய்யப்படும் விகிதத்தைக் கணிக்க முடியாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலும் கட்டுக்குள் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.