/

நாட்டில் 15-18 வயதுடைய 2 கோடி பேருக்கு தடுப்பூசி: பிரதமர் மோடி

நாட்டில் 15 - 18 வயதுடைய இரண்டு கோடிப் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

News image

நாட்டில் 15-18 வயதுடைய 2 கோடி பேருக்கு தடுப்பூசி: பிரதமர் மோடி

Updated On :12 ஜனவரி 2022, 10:57 am


புது தில்லி: நாட்டில் 15 - 18 வயதுடைய இரண்டு கோடிப் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தற்போது, நாட்டின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றியடையச் செய்ய இளைஞர்கள் இதில் சேர்ந்துகொண்டுள்ளனர். இதுவரை 15 - 18 வயதுடைய சிறார்கள் 2 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று புதுச்சேரியில் காணொலி காட்சி மூலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி கூறினார்.

ஜனவரி 3ஆம் தேதி முதல் இதுவரை நாட்டில் 2,82,74,847 தவணை கரோனா தடுப்பூசிகள் 15 - 18 வயதுடைய சிறாருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.