புது தில்லி: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் குணமடைந்து வருவதாக மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
பாதுகாப்புத் துறையின் முதன்மை செய்தித் தொடர்பாளர் பாரத் பூஷண் பாபு இது குறித்து பேசுகையில், ராணுவ மருத்துவமனையின் மருத்துவர்கள் குழுவினர், நேற்று கரோனா உறுதி செய்யப்பட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உடல்நிலையை பரிசோதித்தனர். அவர் நன்கு குணமடைந்து வருகிறார் என்று சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங், தனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக, திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். இது குறித்துவெளியிட்ட சுட்டுரை பதிவில், ‘எனக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மிதமான அறிகுறிகள் உள்ளன. வீட்டுத் தனிமையில் உள்ளேன். அண்மைக்காலமாக என்னை சந்தித்தவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்’ என ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


