மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மூன்று நாள்களுக்குப் பின் திறக்கப்பட்ட ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் (விடியோ)

டிசம்பர் 31ஆம் தேதி முதல் கடந்த மூன்று நாள்களாக மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற ஸ்ரீஜெகந்நாதர் கோயில் இன்று காலை பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்பட்டது.

News image

மூன்று நாள்களுக்குப் பின் திறக்கப்பட்ட ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் (விடியோ)

Updated On :3 ஜனவரி 2022, 12:10 pm


புரி: டிசம்பர் 31ஆம் தேதி முதல் கடந்த மூன்று நாள்களாக மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற ஸ்ரீஜெகந்நாதர் கோயில் இன்று காலை பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்பட்டது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, புத்தாண்டு நாளில், அதிக பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீஜெகந்நாதர் கோயில் டிசம்பர் 31ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் மூடப்பட்டிருந்தது.

ஆனால், கோயிலில் அன்றாடம் நடைபெற வேண்டிய பூஜைகள், பூசாரிகள் மற்றும் சேவார்த்திகள் மூலமாக தொடர்ந்து மூன்று நாள்களும் நடைபெற்று வந்தது. அதுபோல, கோயில் முழுவதும் சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

கோயிலில் பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, சுவாமியை தரிசனம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் வெகுச் சிறப்பாக செய்யப்பட்டு, இன்று மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.