புது தில்லி: போர் நடைபெற்று வரும் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணிகளை நேரில் கண்காணிக்கும் வகையில் 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார்கள்.
போர் தீவிரமடைந்திருக்கும் உக்ரைனில் இன்னும் ஏராளமான இந்தியர்களும், மாணவர்களும் சிக்கியிருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், உக்ரைனின் எல்லைப் பகுதிகளை பகிர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கு நான்கு மத்திய அமைச்சர்கள் சென்று, இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வரும் பணிகளை நேரடியாக பார்வையிடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சிறப்புத் தூதுவர்களாக, மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் புரி, ஜோதிராதித்திய சிந்தியா, கிரெண் ரிஜிஜு, வி.கே. சிங் ஆகியோர், உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார்கள்.
ருமேனியாவுக்கு சிந்தியாவும், ஸ்லோவாகியாவுக்கு ரிஜிஜுவும், ஹங்கேரிக்கு புரியும், போலந்துக்கு வி.கே. சிங்கும் செல்லவிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


