ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லும் 4 மத்திய அமைச்சர்கள்

போர் நடைபெற்று வரும் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணிகைளை நேரில் கண்காணிக்கும் வகையில் 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார்கள்.

News image

உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லும் 4 மத்திய அமைச்சர்கள்

Updated On :28 பிப்ரவரி 2022, 10:29 am


புது தில்லி: போர் நடைபெற்று வரும் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணிகளை நேரில் கண்காணிக்கும் வகையில் 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார்கள்.

போர் தீவிரமடைந்திருக்கும் உக்ரைனில் இன்னும் ஏராளமான இந்தியர்களும், மாணவர்களும் சிக்கியிருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், உக்ரைனின் எல்லைப் பகுதிகளை பகிர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கு நான்கு மத்திய அமைச்சர்கள் சென்று, இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வரும் பணிகளை நேரடியாக பார்வையிடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் சிறப்புத் தூதுவர்களாக, மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் புரி, ஜோதிராதித்திய  சிந்தியா, கிரெண் ரிஜிஜு, வி.கே. சிங் ஆகியோர், உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார்கள்.

ருமேனியாவுக்கு சிந்தியாவும், ஸ்லோவாகியாவுக்கு ரிஜிஜுவும், ஹங்கேரிக்கு புரியும், போலந்துக்கு வி.கே. சிங்கும் செல்லவிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.