/

ரவிதாஸ் விஷ்ராம் தாம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, கரோல் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ராம் தாம் கோயிலில் இன்று வழிபாடு நடத்தினார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:25 am

IANS


புது தில்லி: ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, கரோல் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ராம் தாம் கோயிலில் இன்று வழிபாடு நடத்தினார்.

இன்று காலை கோயிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களின் நலனுக்காக கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்டார். மோடியின் இந்த வருகையின்போது, கோயிலுக்குள் நடந்து கொண்டிருந்த பஜன் கீர்த்தனையிலும் பங்கேற்று, பாடல்களைப் பாடி, வாத்தியங்களை இசைத்து மகிழ்ந்தார். பஜன் கீர்த்தனை பாடும் பக்த குழுவினருடன் மோடி கலந்துரையாடினார்.

மத்திய அரசின் ஒவ்வொரு அடியும், குரு ரவிதாஸின் ஆசியை உள்வாங்கியபடியே நடைபெறுகிறது என்பதை சொல்லிக் கொள்ள பெருமைப்படுகிறேன். காசியில், அவரது நினைவிடம் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடபெற்று வருகிறது என்றும் கூறினார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.