/

பள்ளிகளைத் திறக்க அனுமதிக்காவிட்டால்.. மிரட்டும் உ.பி. தனியார் பள்ளிகள்

உத்தரப்பிரதேசத்தில் உடனடியாக பள்ளிகளைத் திறக்க அனுமதிக்காவிட்டால், ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தப் போவதாக அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கழகம் மிரட்டல் விடுத்துள்ளது.

News image

பள்ளிகளைத் திறக்க அனுமதிக்காவிட்டால்.. மிரட்டும் தனியார் பள்ளிகள்

Updated On :3 பிப்ரவரி 2022, 9:25 am


லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் உடனடியாக பள்ளிகளைத் திறக்க அனுமதிக்காவிட்டால், ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தப் போவதாக அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கழகம் மிரட்டல் விடுத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு உதவி பெறாத 250 தனியார் பள்ளிகளின் சங்கம் சார்பில், மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில், உடனடியாக பள்ளிகளைத் திறக்க உத்தரவிடாவிட்டால், ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தப்போவதாகவும், பேரவைத் தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 6ஆம் தேதி வரை காத்திருப்போம். அதற்குள் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகாவிட்டால், அதன்பிறகு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.