தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனாவிலிருந்து மீண்ட பிறகும் விடாது துரத்தும் இருமல்? அலட்சியம் வேண்டாம்

பேசினாலே இருமல், திடீரென பயங்கர இருமல் என இருமலில் எத்தனை ரகம் உண்டோ அத்தனையும் கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகளாக இன்னமும் உள்ளன.

News image

கரோனாவிலிருந்து மீண்ட பிறகும் விடாது துரத்தும் இருமல்? அலட்சியம் வேண்டாம்

Updated On :2 பிப்ரவரி 2022, 11:20 am


ஹைதராபாத்: பேசினாலே இருமல், திடீரென பயங்கர இருமல் என இருமலில் எத்தனை ரகம் உண்டோ அத்தனையும் கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகளாக இன்னமும் உள்ளன.

கரோனாவிலிருந்து மீண்ட ஏராளமானோர் கூறுவது என்னவென்றால், கரோனாவிலிருந்து மீண்டு ஒரு சில வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், வறட்டு இருமலும், தொடர் இருமலும் இன்னமும் விடவில்லை என்கிறார்கள்.

கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் பலருக்கும் இருமல் இருக்கிறது. ஆனாலும் அதனை அலட்சியம் செய்ய வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதாவது, மருத்துவக் கூற்றுப்படி, எந்த ஒரு இருமலும் 10 - 14 நாள்களுக்கு மேலும் நீடித்தால், நிச்சயம் மருத்துவரை நாட வேண்டும். வறட்டு இருமல் என்பது, உடலில் ஏற்பட்ட தொற்று பாதிப்பு அல்லது வைரஸால் தொண்டையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக உருவாகலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கேர் மருத்துவமனை மருத்துவர் நவோதயா கில்லா இது பற்றி கூறுகையில், தொடர் மற்றும் கடுமையான இருமலுக்கு இருமல் மருந்துகளும், சுடு தண்ணீர் அல்லது வீட்டு வைத்தியங்களே பலனளிக்கும்.

பொதுவாக ஏதேனும் தொற்று பாதிக்கும்போது அதனால் நோய் எதிர்பாற்றல் குறையும் போது மற்றொரு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, 14 நாள்களுக்கும் மேல் தொடர்ந்து இருமல் இருந்தால் மருத்துவரை நாட வேண்டும். அலட்சியம் வேண்டாம் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.