தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இனி சாலைகளில் ஒருவரும் குளிரில் நடுங்கக்கூடாது: உ.பி.முதல்வர்

உத்தரப் பிரதேசத்தில் வெப்பநிலை குறைந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வீடற்றவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்யுமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

News image

இனி சாலைகளில் ஒருவரும் குளிரில் நடுங்கக்கூடாது: உ.பி.முதல்வர்

Updated On :19 டிசம்பர் 2022, 7:04 am

உத்தரப் பிரதேசத்தில் வெப்பநிலை குறைந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வீடற்றவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்யுமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

மாநிலத்தில் கடும் பனி நிலவி வருவதால் மக்கள் பலரும் நடுங்கிக் கிடக்கின்றனர். இதில் வீடற்றவர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பாதுகாக்கும் வகையில், நிவாரண  உதவிகளை வாங்கி அவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்  என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் போர்வைகள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும், அவற்றின் விலையில் சீரான தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஞாயிறன்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் தெரிவித்தார். 

அதேசமயம், போர்வைகள் கொள்முதலில் உள்ளூர் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசு ஆணையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

மேலும், நிவாரணப் பொருள்களை உள்ளூர் எம்.பி., எம்எல்ஏ.க்கள், தலைவர்கள், பிரதிநிதிகளால் மட்டுமே விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும். நிர்வாக அதிகாரிகளும் உதவியைச் செய்வார்கள். 

அனைத்து நகரங்களிலும் இரவு தங்குமிடங்களை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இனி சாலைகளில் ஒருவரும் குளிரில் நடுங்குவதைப் பார்க்கக்கூடாது என்றார். 

இரவு தங்குமிடங்களில் சுத்தம் மற்றும் சுத்திகரிப்பைத் தவிர படுக்கைகள் மற்றும் பாதுகாப்பையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.