தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சீனாவின் பெயரால் பயத்தைப் பரப்புகிறார் ராகுல்: அனுராக் தாக்குர்!

ராகுல் காந்தி சீனாவின் பெயரால் பயத்தைப் பரப்புகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆயுதப் படைகள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றம் சாட்டியுள்ளார். 

News image
Updated On :17 டிசம்பர் 2022, 11:41 am

ராகுல் காந்தி சீனாவின் பெயரால் பயத்தைப் பரப்புகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆயுதப் படைகள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றம் சாட்டியுள்ளார். 

சீனர்கள் ராணுவ வீரர்களை அடிக்கின்றனர் என்ற காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த தாக்குர், டோக்லாமில் இந்திய வீரர்கள் சீன வீரர்களுடன் சண்டையிட்டபோது, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சீனர்களுடன் சூப் குடிப்பதில் பிஸியாக இருந்தார். 

சீனா என்ற பெயரில் பயத்தைப் பரப்புவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இது 1962இன் இந்தியா அல்ல, இது 2014இன் இந்தியா. 

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது. 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ஆயுதப் படைகளுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் அல்லது ரஃபேல் போர் விமானங்கள் மூலம் அரசு அதிகாரம் அளிக்கவில்லை என்றார்.

இன்று இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதியாளராக உள்ளது, இறக்குமதியாளராக இல்லை. இதுதான் ஆத்மநிர்பர் பாரத் என்றார்.

சீனா போருக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், இந்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்றும், அச்சுறுத்தலைப் புறக்கணிக்க முயல்வதாகவும் ஜெய்ப்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் காந்தி உரை நிகழ்த்தினார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.