தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லி ஆசிட் வீச்சு சம்பவம்: ஆன்லைனில் ஆசிட் வாங்கிய குற்றவாளி

தில்லியின் மோகன் கார்டன் பகுதியில், 17 வயது மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி ஆன்லைன் மூலம் ஆசிட் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 டிசம்பர் 2022, 10:33 am

புது தில்லி: தில்லியின் மோகன் கார்டன் பகுதியில், 17 வயது மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி ஆன்லைன் மூலம் ஆசிட் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், மூன்று பேரை கைது செய்திருக்கும் காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிட் வீசிய இளைஞரும், அந்த மாணவியும் நண்பர்களாக இருந்துள்ளனர். அண்மையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்துவிட்ட நிலையில், மாணவி மீது ஆசிட் வீச்சில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவியின் முகத்தில் 8 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு கண்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை கண் மருத்துவர் பரிசோதித்த பிறகே தெரிய வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிஎல்ஏடி தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார்.

புதன்கிழமை காலை 5.30 மணியளவில், சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த மாணவி மீது, பைக்கில் வந்த இளைஞர்களில் ஒருவர் ஆசிட்டை வீசியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.