தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஐந்து நாள்களுக்கு முன்பு ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் ஐந்து நாள்களுக்கு முன் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சிறுவன் பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

News image

ஐந்து நாள்களுக்கு முன்பு ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

Updated On :10 டிசம்பர் 2022, 10:32 am

மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் ஐந்து நாள்களுக்கு முன் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சிறுவன் பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

சிறுவனை மீட்கும் பணிகள் 5 நாள்களாக நடைபெற்று வந்த நிலையில், சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து, சனிக்கிழமை காலை 5 மணியளவில், அவரது உடல் மட்டுமே மீட்கப்பட்டது.

மீட்புக் குழுவினருடன் சிறுவன் பேசி வந்த நிலையில், வெள்ளிக்கிழமைக்குப் பிறகு சிறுவனிடமிருந்து எந்த சப்தமும் வராததால், அவன் உயிரிழந்ததை மீட்புப் படையினர் அறிந்து கொண்டு, தீவிரமாக செயல்பட்டு உடலை மீட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தனது வீட்டினருகே உள்ள வயலில் சிறுவன் தன்மயி விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, சமீபத்தில் தோண்டப்பட்டு மூடப்படாமல் வைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தன்மயி தவறி விழுந்தாா். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினா் விரைந்தனா். தன்மயி 35 அடி முதல் 45 அடிக்குள்ளாக சிக்கியிருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னா், மண்அள்ளும் பொக்லைன் இயந்திரத்தின் துணை கொண்டு 25 அடி வரை குழி தோண்டப்பட்டது.

சிறுவனை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வந்தது. காவல் துறை, மாவட்ட நிா்வாகம் உறுதுணையோடு மீட்புப் படையினா் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வவந்தனர். ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் குழிதோண்டி சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தான். இன்று காலை சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.