டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஜெய்ப்பூரில் 35 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு வலைவீச்சு 

ஜெய்ப்பூரில் 35 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:10 am

ANI

ஜெய்ப்பூரில் 35 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெய்ப்பூர் சந்திப்பு ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. குடிபோதையில் இருந்த கணவருக்கு உணவு வாங்கி வருவதற்காகப் பெண் வெளியே சென்றுள்ளார்.

இந்நிலையில், ரயில் நிலையம் அருகே 5 பேர் கொண்ட கும்பல் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர், அந்தப் பெண் அவர்களிடமிருந்து தப்பித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறப்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்

பெண் கொடுத்த புகாரின் பேரில் தடய அறிவியல் பிரிவினர் குற்றம் நடந்த இடத்திற்கு வந்து, சம்பவம் நடைபெற்ற இடத்தில் தடயங்களைச் சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து அரசு ரயில்வே காவல்துறையும் அறிக்கை வெளியிட்டு விசாரணை குறித்துத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.