2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உ.பி.யில் சீருடை அணியாததால் தலித் மாணவிக்கு நேர்ந்த அவலம்!

உத்தரப் பிரதேசத்தில் சீருடை அணியாததால் சிறுமியை அடித்து பள்ளியை விட்டு வெளியேற்றிய அவலம் நிகழ்ந்துள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:08 am

PTI

உத்தரப் பிரதேசத்தில் சீருடை அணியாததால் சிறுமியை அடித்து பள்ளியை விட்டு வெளியேற்றிய அவலம் நிகழ்ந்துள்ளது. 

அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவியிடம் சீருடை அணியாதது குறித்து முன்னாள் கிராமத் தலைவர் மனோஜ் குமார் துபே விசாரித்துள்ளார். 

அதற்கு அந்த மாணவி தனது தந்தை வாங்கித்தரும்போது அணிந்து கொள்வதாகப் பதிலளித்தார். 

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த துபே, அங்கேயே மாணவியை அடித்து, சாதியைப் பற்றிக் கூறி பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ளார். 

துபே அதிகாரியோ அல்லது ஆசிரியரோ கிடையாது. முன்னாள் கிராமத் தலைவர் தான். இருப்பினும் அவர் தினமும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்வது வழக்கமாகக் கொண்டிருந்தார். 

இதையடுத்து சிறுமி பெற்றோரிடம் புகார் கூறியதையடுத்து, முன்னாள் கிராமத் தலைவர் மனோஜ் குமார் துபே மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாக சௌரி காவல் நிலையப் பொறுப்பாளர் கிரிஜா சங்கர் யாதவ் தெரிவித்தார். 

மேலும், குற்றவாளிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.