பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

உ.பி.யில் சீருடை அணியாததால் தலித் மாணவிக்கு நேர்ந்த அவலம்!

உத்தரப் பிரதேசத்தில் சீருடை அணியாததால் சிறுமியை அடித்து பள்ளியை விட்டு வெளியேற்றிய அவலம் நிகழ்ந்துள்ளது. 

News image
Updated On :23 ஆகஸ்ட் 2022, 10:29 am

உத்தரப் பிரதேசத்தில் சீருடை அணியாததால் சிறுமியை அடித்து பள்ளியை விட்டு வெளியேற்றிய அவலம் நிகழ்ந்துள்ளது. 

அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவியிடம் சீருடை அணியாதது குறித்து முன்னாள் கிராமத் தலைவர் மனோஜ் குமார் துபே விசாரித்துள்ளார். 

அதற்கு அந்த மாணவி தனது தந்தை வாங்கித்தரும்போது அணிந்து கொள்வதாகப் பதிலளித்தார். 

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த துபே, அங்கேயே மாணவியை அடித்து, சாதியைப் பற்றிக் கூறி பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ளார். 

துபே அதிகாரியோ அல்லது ஆசிரியரோ கிடையாது. முன்னாள் கிராமத் தலைவர் தான். இருப்பினும் அவர் தினமும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்வது வழக்கமாகக் கொண்டிருந்தார். 

இதையடுத்து சிறுமி பெற்றோரிடம் புகார் கூறியதையடுத்து, முன்னாள் கிராமத் தலைவர் மனோஜ் குமார் துபே மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாக சௌரி காவல் நிலையப் பொறுப்பாளர் கிரிஜா சங்கர் யாதவ் தெரிவித்தார். 

மேலும், குற்றவாளிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.