மேற்கு தில்லியின் முண்ட்கா பகுதியில் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்ததாக போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
உயிரிழந்த மூவரும் பக்கர்வாலா, ஜே.ஜே காலனியில் வசிப்பவர்கள். மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியவுடன், அங்குள்ளவர்கள் மூவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் மங்கள்(60), ஜோகிந்தர்(42) ஆகியோர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மோகன்லால்(62) சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்குத் தடய அறிவியல் ஆய்வகத்தின் குழுக்கள் ஆய்வு செய்து ஆறு வெற்று தோட்டாக்கள் மற்றும் மூன்று செயல்படும் தோட்டாக்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 25 முதல் 28 வயதுக்குள்பட்ட இருவர் இரவு 9.05 மணியளவில் பக்கர்வாலா கிராமத்திலிருந்து வருவதைக் காண முடிந்தது, சில நிமிடங்களுக்குப் பிறகு, திரும்பி ஓடுவதைக் கண்டதாக அதிகாரி கூறினார்.
அவர்களில் ஒருவர் கருப்பு தொப்பி அணிந்திருந்தார், மற்றொருவர் தலையில் மப்ளர் கட்டியிருந்ததாகத் துணை ஆணையர் சமீர் சர்மா தெரிவித்தார்.
சம்பவ நடைபெற்ற அன்று மோகன்லால், மங்களுடன் ஜோகிந்தரின் வீட்டிற்குச் சென்றுள்ளார், இரவு 9 மணியளவில், இரண்டு பேர் அங்கு வந்து, ஜோகிந்தரின் இறந்த தந்தை சதீஷ் வசிக்கும் இடத்தைப் பற்றி கேட்டனர்.
ஜோகிந்தர் தனது தந்தையின் புகைப்படத்தை சுட்டிக்காட்டியபோது, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். லால் வீட்டிற்குள் ஓடியபோது ஜோகிந்தரும் மங்களையும் சுட்டதில், இருவரும் கீழே விழுந்தனர்.
ஜோகிந்தர் சான்சி சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், மங்கள் கூடார வியாபாரி, லால் இ-ரிக்ஷா ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


