பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

அமர்நாத் யாத்திரையின் நிறைவு பூஜையை செய்தார் காஷ்மீர் துணைநிலை ஆளுநர்

அமர்நாத் யாத்திரையின் நிறைவு பூஜையை குறிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை சமபன் பூஜையை செய்தார் ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா. 

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 10:50 am

அமர்நாத் யாத்திரையின் நிறைவு பூஜையை குறிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை சமபன் பூஜையை செய்தார் ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா. 

இதுகுறித்து சின்ஹா கூறியதாவது, 

இந்த கடினமான யாத்திரையை எந்தவித இடையூறு இல்லாமல் செய்ததற்காக அனைத்து பங்குதார்கள் மற்றும் குடிமக்களின் தன்னலமற்ற பங்களிப்பை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன் 

ஸ்ரீநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமர்நாத்ஜி ஆலய வாரியத்தின் அதிகாரிகள், தலைமைச் செயலாளர் டாக்டர் அருண்குமார் மேத்தா, தலைமை நிர்வாக அதிகாரி நிதிஷ்வர் குமார், வாரிய உறுப்பினர் டிசி ரெய்னா ஆகியோரும் பங்கேற்றனர். 

கரோனா தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளாக இடை நிறுத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு யாத்திரை மீண்டும் தொடங்கியது. இதில், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

கடந்த ஜூலை 8-ம் தேதி கோயிலுக்கு அருகே ஏற்பட்ட மேக வெடிப்பில் 15 பயணிகள் உயிரிழந்ததால், இந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.