மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

குஜராத்: காங். எம்எல்ஏவின் மருமகன் ஏற்படுத்திய விபத்தால் 6 பேர் பலி

குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் மருமகன் ஏற்படுத்திய சாலை விபத்தில் 6 பேர் பலியானதையடுத்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:02 am

PTI

குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் மருமகன் ஏற்படுத்திய சாலை விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆனந்த் நகரத்தை தாராபூருடன் இணைக்கு மாநில நெடுஞ்சாலையில் சோஜித்ரா கிராமத்திற்கு அருகே வியாழன் மாலை இந்த விபத்து நிகழ்ந்தது. 

காங்கிரஸ் எம்எல்ஏவின் மருமகன் கார் ஓட்டும் போது ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் மூன்று பெண்கள் உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர். 

விபத்தை ஏற்படுத்தியவர் சோஜித்ரா சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பூனம்பாய் பர்மாரின் மருமகன் கேதன் பதியார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பதியார் தற்போது அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று சோஜித்ரா காவல் நிலைய துணை ஆய்வாளர் ஏ.பி.பர்மர் தெரிவித்தார். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜித் ராஜ்ஜியன்  கூறுகையில், 

பதியார் கண்காணிப்பில் இருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதும் கைது செய்யப்படுவார். மேலும் அவர் வாகனத்தை ஓட்டும்போது குடிபோதையில் இருந்தாரா என்பதை இரத்த மாதிரிகளைப் பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளோம் என்றார். 

உயிரிழந்த ஆறு பேரும் சோஜித்ரா மற்றும் போரியாவி கிராமங்களில் வசிப்பவர்கள் ஆவார். பதியார் வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றார். ஆனால் அவர் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு பிடிபட்டார் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.