மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

காதலுக்கு எதிர்ப்பு: காதலருடன் சேர்ந்து 16 வயது மகனைக் கொன்ற தாய்!

உத்தரப் பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்ற மகனையே, காதலருடன் சேர்ந்து கொலை செய்துள்ள தாயை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:02 am

PTI

உத்தரப் பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்ற மகனையே, காதலருடன் சேர்ந்து கொலை செய்துள்ள தாயை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர். 

தாய் முனேஷ் மற்றும் அவரது காதலர் சதேந்திரா ஆகியோர் திங்கள்கிழமை அதிகாலை தனது 16 வயது மகனான ஆஷிஷைக் கொன்று, அவரது உடலை ஒரு குழாய்க் கிணற்றில் வீசியதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் வினித் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். 

பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து விதவையான பெண்ணிடம் விசாரிக்கையில், தொடர்ந்து தங்கள் உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தான். அதனால் மகன் ஆஷிஷை கூட்டாக இணைந்து கொலை செய்தோம் என்று இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

கணவர் இறந்த பிறகு அந்தப் பெண் சதேந்திராவுடன் உறவை வளர்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.