பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

உ.பி.யில் ஆறு கிராமங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

உத்தரப் பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களில் உள்ள 6 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில நிவாரண ஆணையர் ரன்வீர் பிரசாத் தெரிவித்தார்

News image
Updated On :9 ஆகஸ்ட் 2022, 6:13 am

கங்கை, சாரதா மற்றும் காக்ரா நதிகள் அபாய அளவைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களில் உள்ள 6 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில நிவாரண ஆணையர் ரன்வீர் பிரசாத் தெரிவித்தார். 

நிவாரண ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மாநிலத்தின் 10 மாவட்டங்களில் ஒருநாளில் 25 மி.மீ அல்லது அதற்கு மேற்பட்ட மழை பெய்துள்ளதாகவும், கோண்டா, மாவ் மற்றும் சிதாபூர் மாவட்டங்களில் உள்ள 6 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

பதாவுன் மாவட்டத்தில் கங்கை நதி, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் சாரதா நதி மற்றும் பல்லியா மாவட்டத்தில் காக்ரா நதி ஆகியவை அபாய அளவைத் தாண்டி ஓடிக்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

ஜூன் 1 முதல் தற்போது வரை மாநிலத்தில் சராசரி மழையளவு 248 மிமீ ஆகும். இது 416.4 மிமீ சராசரி மழையில் சதவீதம் ஆகும்.

மீட்புப் பணிகளுக்காக 35 மாவட்டங்களில் 55 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நிவாரண ஆணையர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.