மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

மகாராஷ்டிர அமைச்சரவையில் சர்ச்சையில் சிக்கிய 3 எல்எல்ஏக்கள்!

மகாராஷ்டிரத்தின் அமைச்சரவை விரிவாக்கத்தில் பதவியேற்றுக்கொண்ட 18 எம்எல்ஏ.க்களில் 3 அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:48 pm

PTI

மகாராஷ்டிரத்தின் அமைச்சரவை விரிவாக்கத்தில் பதவியேற்றுக்கொண்ட 18 எம்எல்ஏ.க்களில் 3 அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் சஞ்சய் ரத்தோட், முன்னதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசில் அமைச்சராகப் பணியாற்றினார். இவர் கடந்தாண்டு புணேவில் ஒரு பெண்ணின் மரணத்தில் தொடர்புடையதாகக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். 

அதன்பின்னர் போலீசார் ரத்தோட்டுக்கு க்ளீன் சிட் வழங்கியதாக முதல்வர் ஷிண்டே கூறியதையடுத்து, அவர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். 

ஒரு பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர் என்று கூறப்பட்டபோதும் ரத்தோட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று மாநில பாஜக துணைத் தலைவர் சித்ரா வாக் கூறியுள்ளார்.  அவரை அமைச்சரவையின் அமைச்சர் ஆக்கினாலும், அவருக்கு எதிரான எனது போராட்டத்தைத் தொடர்வேன். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, நாங்கள் போராடி வெற்றி பெறுவோம் என்றார். 

புதிதாகப் பதவியேற்ற மற்றொரு அமைச்சரும், சிவசேனா எம்எல்ஏ.வுமான சத்தார் ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

சத்தார் முன்பு காங்கிரஸில் இருந்தார். 2019ல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு சிவசேனாவில் சேர்ந்தார். சர்ச்சையில் சிக்கிய சத்தார் இது ஒரு அரசியல் சதி என்று குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், புதிதாகப் பதவியேற்ற மற்றொரு அமைச்சரும், பாஜக தலைவருமான விஜய்குமார் காவிட் 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் அவர் தலைமையிலான பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 5 ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டார். 

2004-09ல் என்சிபியில் இருந்த காவிட், அப்போதைய காங்கிரஸ் என்சிபி அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர், பாஜகவில் இணைந்து 2014 மற்றும் 2019 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.