குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நிறைவு: இன்று மாலையே முடிவு அறிவிப்பு?

 நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை காலை தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. விரைவில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி இன்று இரவுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என

News image
மாலையில் முடிவு அறிவிப்பு
Updated On :1 பிப்ரவரி 2024, 10:00 am

PTI

 நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை காலை தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. விரைவில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி இன்று இரவுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இன்று காலையிலேயே பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கினை செலுத்திச் சென்றார்.

மொத்தமுள்ள 780 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தற்போது 8 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருக்கிறது. பிற்பகல் 2 மணி வரை சுமார் 670 பேர் அதாவது 85 வாக்குகள் பதிவாகியிருந்தததாக செய்திகள் வெளியாகின.

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கரும் (71), எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வாவும் (80) களத்தில் உள்ளனா்.

குடியரசுத் தலைவா் தோ்தலைப் போல் அல்லாமல், இத்தோ்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பாா்கள். நியமன உறுப்பினா்களும் வாக்களிக்க தகுதி பெற்றவா்களாவா். எம்.பி.க்கள் வாக்களிக்க வசதியாக, நாடாளுமன்றத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மொத்தம் 788 எம்.பி.க்களை உள்ளடக்கிய இத்தோ்தலில் ஒவ்வொரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு ஒன்றுதான். ரகசிய வாக்கெடுப்பு முறையில் தோ்தல் நடைபெறும். வாக்கை வெளியே காண்பிப்பது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இத்தோ்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென எம்.பி.க்களுக்கு கட்சிகள் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவடைகிறது. குடியரசு துணைத் தலைவா்தான், மாநிலங்களவை தலைவராக செயல்படுவாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலையில் முடிவு அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான வாக்குப்பதிவு  மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றதும், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும். நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவா் யாா் என்பது சனிக்கிழமை மாலையில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.