குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

கேரளத்தில் கனமழை; நடுக்காட்டில் சிக்கிக் கொண்ட 3 கர்ப்பிணிகள் மீட்பு

கனமழை காரணமாக கேரள மாநிலம் வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் நடுக்காட்டில் மழையில் சிக்கிக் கொண்டிருந்த மூன்று கர்ப்பிணிகளை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

News image
கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?
Updated On :1 பிப்ரவரி 2024, 9:59 am

PTI


திரிசூர்: கனமழை காரணமாக கேரள மாநிலம் வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் நடுக்காட்டில் மழையில் சிக்கிக் கொண்டிருந்த மூன்று கர்ப்பிணிகளை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

காட்டில் வசித்து வரும் பழங்குடியின மக்களில் மூன்று பெண்கள் கர்ப்பிணிகளாக இருந்த நிலையில், கனமழை பெய்ததால் காடு முழுக்க வெள்ளக்காடானது.

அங்கி சிக்கிக் கொண்டிருந்த மூன்று கர்ப்பிணிகளையும் வனத்துறையினரும் காவல்துறையினரும் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே மூன்று கர்ப்பிணிகளில் ஒருவர் வனப்பகுதிக்குள்ளேயே குழந்தையைப் பெற்றெடுத்தார். அவர் மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டதால், வனத்துறையினர் அவருக்குத் தேவையான உதவிகளை செய்துகொடுத்துவிட்டு, மற்ற இரண்டு கர்ப்பிணிகளையும் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

ஒருவர் ஆறு மாதம் மற்றொருவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளனர்.  அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தித்தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஒப்புக்கொள்ள வைத்தனர். பெரிங்கல்குத் அணைக்கட்டைத் தாண்டி, படகு வழியாக, மிகப்பெரிய சவலான பாதையைக் கடந்து கர்ப்பிணிகளை மீட்கப்பட்டுள்ளனர்.

தீவிர முயற்சி மேற்கொண்டு கர்ப்பிணிகளை மீட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.