தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எல்ஐசி பங்கின் விலை ரூ.902 - 949 ஆக நிர்ணயம்

எல்ஐசியின் பங்குகளை ஐபிஓ (பொது பங்கு) வாயிலாக பங்குச் சந்தையில் வெளியிடவிருக்கும் நிலையில், ஒரு பங்கின் விலை ரூ.902- 949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :27 ஏப்ரல் 2022, 10:36 am

எல்ஐசியின் பங்குகளை ஐபிஓ (பொது பங்கு) வாயிலாக பங்குச் சந்தையில் வெளியிடவிருக்கும் நிலையில், ஒரு பங்கின் விலை ரூ.902- 949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு மே 4-ஆம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தகவலை முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே இன்று வெளியிட்டார்.

எல்ஐசியின் 3.5 சதவீத பங்குகளை ஐபிஓ (பொது பங்கு) வாயிலாக மத்திய அரசு விற்பனை செய்து ரூ.21,000 கோடி திரட்ட திட்டமிட்டிருந்தது. முன்னதாக கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு 5 சதவீத பங்கு அல்லது ரூ.31.6 கோடி பங்கை விற்பனை செய்ய முடிவெடுத்து, அதற்கான வரைவு அறிக்கைகளை செபியிடம் தாக்கல் செய்திருந்தது. ஆனால், உக்ரைன்- ரஷியா போரால் சந்தையில் காணப்பட்ட நிலையற்ற தன்மை காரணமாக பொதுப் பங்கு விநியோக திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டது. 

ஆகையால், பங்கு வெளியீட்டு அளவை 5 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக கடந்த வாரம் மத்திய அரசு குறைத்தது. ரூ.21 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டாலும், இந்தியாவில் பொது பங்கு வாயிலாக வெளியிடப்படும் மிகப்பெரிய பங்குகளாக எல்ஐசி ஐபிஓ அமையும் என்று கூறப்படுகிறது.

இந்தப் பங்கு வெளியீடு மே 4 முதல் மே 9-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.