ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கர்நாடக அமைச்சர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு

கர்நாடக ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

கர்நாடக அமைச்சர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு

Updated On :13 ஏப்ரல் 2022, 11:15 am


மங்களூர்: பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கர்நாடக ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை வழக்கில், அமைச்சர் ஈஸ்வரப்பாவின் பெயர் குற்றம்சாட்டப்பட்டவர் பட்டியலில் முதல் பெயராக சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அமைச்சர் மீது லஞ்சப் புகார் அளித்த பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அது குறித்து அவரது சகோதரர் பிரஷாந்த் பட்டீல் அளித்த புகாரின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடுப்பியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த பிரஷாந்த் பட்டீல், தற்கொலை செய்து கொண்டார். பிரஷாந்த் அளித்திருந்த லஞ்சப் புகாரின் அடிப்படையில், அவரது தற்கொலை வழக்கில், அமைச்சர் ஈஸ்வரப்பாவின் அமைச்சக ஊழியர்கள் ரமேஷ், பசவராஜ் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொதுப் பணித் துறை ஒப்பந்தம் ஒன்றை சந்தோஷ் பட்டீல் மேற்கொண்டிருந்த நிலையில், அதற்கு உரிய தொகையை அமைச்சகம் விடுவிக்காமல் இருந்தது. தொகையை விடுவிக்கக் கோரி சந்தோஷ் பல முறை வலியுறுத்தியும், தொகையை வெளியிட வேண்டும் என்றால் 40 சதவீதம் லஞ்சம் தர வேண்டும் என்று அமைச்சக ஊழியர்கள் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் கேட்டுள்ளனர்.  

இது குறித்து வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்த சந்தோஷ் பட்டீல், தற்கொலை செய்து கொண்டிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.