புது தில்லி: தற்போதைய நிலையில், ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸானது மிகவும் வேகமாகப் பரவும் திறன்கொண்டது என்றும், மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் நுண்ணுயிரியல் துறை நிபுணர் டாக்டர் ககன்தீப் காங் விளக்கம் அளித்துள்ளார்.
"ஒமைக்ரான்-எக்ஸ்இ பற்றி கவலைப்படத்தேவையில்லை. ஏன் புதிய வகை வைரஸைப் பார்த்து அச்சப்பட வேண்டும்? வைரஸ் என்றாலே அதன் உருமாறிய வைரஸ்கள் வந்து கொண்டுதானிருக்கும்" என்று வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் ககன்தீப் காங் கூறியுள்ளார்.
தற்போது பரவி வரும் ஒமைக்ரான்-எக்ஸ்இ, உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை. எனவே அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்காவிலிருந்து வந்த 50 வயது பெண்ணுக்கு ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் கண்டறியப்பட்டதாக மும்பை மாநகராட்சி புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. பிப்ரவரி மாதம் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, அந்த கரோனா வைரஸ் ஒமைக்ரான்-எக்ஸ்இ வகையைச் சேர்ந்தது என்று தற்போது வைரஸ் மரபணு வரிசை முறை ஆய்வில் தெரிய வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மறுத்திருந்தார்.
ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் என்பது ஒமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 வின் கூட்டுச் சேர்க்கையாக உள்ளது. இது ஒமைக்ரானை விட 10 மடங்கு கூடுதலாக பரவும் தன்மை கொண்டது.
தொடர்ந்து கரோனா வைரஸின் உருமாறிய வைரஸ்கள் வந்து கொண்டுதானிருக்கும். இது பற்றி அறிவித்துக் கொண்டேதானிருப்பார்கள். இது முந்தைய வைரஸ்களைக் காட்டிலும் அதிகம் பரவும் திறன் கொண்டதுதான். ஆனால், அது அபாயத்தை ஏற்படுத்துமா என்றால்? இந்த நொடி வரை அப்படி இல்லை. ஏற்கனவே பிஏ2 பரவிய போது மிகுந்த அச்சம் ஏற்பட்டது. ஆனால் அது பிஏ1 ஐ விட அதிக அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை.
அதிகம் பரவும் என்பது ஒரு விஷயமேயில்லை. அதிகமானோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில், நான் கூட அது பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்கிறார் மருத்துவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


