டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இந்து, முஸ்லிம் பெண்கள் ஒருவருக்கொருவரின் கணவர்களுக்காக சிறுநீரக தானம்

சுஷ்மா உனையால் (48), சுல்தானா கத்தூன் (46) ஆகியோர் தங்களது தலையெழுத்தை மாற்ற ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவரின் கணவர்களுக்கு தங்களது சிறுநீரகத்தை தானமளித்துள்ளனர்.

News image
இந்து, முஸ்லிம் பெண்கள் ஒருவருக்கொருவரின் கணவர்களுக்காக சிறுநீரக தானம்
Updated On :28 ஜனவரி 2024, 4:13 am

ENS

டேஹ்ராடூன்: சுஷ்மா உனியால் (48), சுல்தானா கத்தூன் (46) ஆகியோர் தங்களது தலையெழுத்தை மாற்ற ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவரின் கணவர்களுக்கு தங்களது சிறுநீரகத்தை தானமளித்துள்ளனர்.

ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் வகையில், இந்து பெண், முஸ்லிம் பெண்ணின் கணவருக்கும், முஸ்லிம் பெண் இந்து பெண்ணின் கணவருக்கும் தங்களது சிறுநீரகத்தை தானமளித்துள்ளனர்.

கடந்த வாரம் இதற்கான அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. அஷ்ரஃப் அலி (51), விகாஸ் உனியால் (50) ஆகியோர் தற்போது நலமாக உள்ளனர்.

நடந்தது என்ன? 
இருவருக்கும் சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்து வந்தனர். சிறுநீரக தானத்துக்காக மிகப்பெரும் தேடலும் நடைபெற்று வந்தது.

இது குறித்து சுஷ்மா உனியால் கூறுகையில், எனது உணர்ச்சிப் பெருக்குகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சுல்தானா கத்தூன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நான் என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள முன் வந்தோம். அதனால்தான் இங்கே இரண்டு குடும்பங்களாக இருக்கிறோம் என்றார் கண் கலங்கியபடி.

சுஷ்மா உனியாலிடம் சிறுநீரகத்தை தானம் பெற்றவரின் மனைவியான சுல்தானா கத்தூன் கூறுகையில், சுஷ்மா எனது உடன்பிறவா சகோதரியாக மாறியுள்ளார். இந்த உலகிலேயே, மனிதநேயத்தை விடச் சிறந்த உறவு வேறு எதுவுமே இல்லை என்றார்.

உனியால் கூறுகையில், எனது கணவரின் சிறுநீரகம் வெகுவாகப் பாதித்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஹோமோடயாலிசிஸ் செய்து வந்தோம். எனக்கோ, எனது குடும்பத்தினரின் சிறுநீரகமோ அவருக்குப் பொருந்தவில்லை. அப்போதுதான் ஹிமாலயன் மருத்துவமனையிலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அங்கேச் சென்று, ஒருவருக்கு ஒருவர் பேசி முடிவு செய்து இன்று மகிழ்ச்சியோடு இருக்கிறோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.