சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மூன்று மாதங்களில் மூன்று பாஜக முதல்வர்கள் ராஜிநாமா!

கடந்த மூன்று மாதங்களில் மூன்றாவது பாஜக முதல்வராக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

News image
எடியூரப்பா, தீரத் சிங் ராவத் மற்றும் விஜய் ரூபானி
Updated On :28 ஜனவரி 2024, 4:07 am

DIN


கடந்த மூன்று மாதங்களில் மூன்றாவது பாஜக முதல்வராக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

உத்தரகண்ட்:

உத்தரகண்ட் முதல்வராக கடந்த மார்ச் 10-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார் தீரத் சிங் ராவத். அவர் பேரவைக்குத் தேர்வாகததால் அடுத்த 6 மாதங்களில் இடைத் தேர்தலில் போட்டியிட்டு பேரவைக்குத் தேர்வாக வேண்டிய சூழல் நிலவி வந்தது. ஆனால், அரசியல் குழப்பங்கள் மற்றும் இடைத் தேர்தல் குறித்த சரியான நிச்சயமற்றத் தன்மை உள்ளிட்ட காரணங்களால் ஜூலை 2-ம் தேதி ராஜிநாமா முதல்வர் பதவியை செய்தார். இவர் 115 நாள்கள் மட்டுமே முதல்வராகப் பதவி வகித்தார்.

இதன்பிறகு, உத்தரகண்டின் 11-வது முதல்வராக பாஜகவைச் சேர்ந்த புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்.

கர்நாடகம்:

கர்நாடக முதல்வராக இருந்த பி.எஸ். எடியூரப்பாவுக்கு சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்புகள் இருப்பதாக ஊடகங்களில் நீண்ட நாள்களாக செய்தி வந்துகொண்டிருந்தன. அவருடையப் பதவிக் காலம் 2023 வரை இருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகள் மட்டுமே முதல்வர் பதவி வகித்த அவர் கடந்த ஜூலை 26-ம் தேதி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதன்பிறகு, பசவராஜ் பொம்மை ஜூலை 28-ம் தேதி கர்நாடகத்தின் 23-வது முதல்வராகப் பதவியேற்றார்.

குஜராத்:

இந்த நிலையில், மூன்றாவது பாஜக முதல்வராக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி சனிக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். குஜராத்தின் வளர்ச்சிப் பயணம் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் மற்றும் புதிய தலைமையின் கீழ் தொடர வேண்டும் என்பதால் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

குஜராத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று மாதங்களில் மூன்றாவது பாஜக முதல்வர் ராஜிநாமா என்றால், நிகழாண்டில் மொத்தம் நான்கு பாஜக முதல்வர்கள் ராஜிநாமா செய்துள்ளனர். உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் கடந்த மார்ச மாதம் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.