பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

உத்தரப்பிரதேசத்தை அச்சுறுத்தும் ஸிகா வைரஸ்

கடந்த வார இறுதியில் கான்பூரில் ஒருவருக்கு ஸிகா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, அம்மாநில அரசு ஸிகா வைரஸ் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

News image

உத்தரப்பிரதேசத்தை அச்சுறுத்தும் ஸிகா வைரஸ்

Updated On :26 அக்டோபர் 2021, 7:48 am


லக்னௌ: கடந்த வார இறுதியில் கான்பூரில் ஒருவருக்கு ஸிகா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, அம்மாநில அரசு ஸிகா வைரஸ் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் வேத் விரத் சிங் வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில், மாநிலத்தில் உள்ள அனைத்து சுகாதாரத் துறைத் தலைவர்களும், ஸிகா வைரஸ் குறித்து அறிந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சந்தேகப்படுபவர்களை கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தினை தொடர்பு கொண்டு பரிசோதனை நடத்த வலியுறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஏடியஸ் வகை கொசுக்கள் மூலம் இந்த ஸிகா வைரஸ் பரவுகிறது என்பதால், பொதுமக்களும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகை கொசுக்கள்தான் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களுக்கும் காரணமாக விளங்கின.

ஸிகா வைரஸ் தாக்கினால், காய்ச்சல் மற்றும் குளிர், மூட்டு வலி, தோல் பாதிப்பு, சிவந்த கண்கள் போன்றவை அறிகுறிகளாக உள்ளன. ஸிகா வைரஸ் கர்ப்பிணியை தாக்கினால், வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.