பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

திரிணமூலில் இணையும் கோவா சுயேச்சை எம்.எல்.ஏ.

கோவா சட்டப்பேரவை உறுப்பினர் பிரசாத் கெளன்கர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் புதன்கிழமை இணையவுள்ளார்.

News image

திரிணமூலில் இணையும் கோவா சுயேட்சை எம்.எல்.ஏ.

Updated On :13 அக்டோபர் 2021, 10:40 am

கோவா சட்டப்பேரவை உறுப்பினர் பிரசாத் கெளன்கர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் புதன்கிழமை இணையவுள்ளார்.

அடுத்தாண்டு கோவாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தரப்பினர் இணைந்து வருகின்றனர்.

கடந்த மாதம் கோவா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான லூயிசினோ ஃபெலேரோ திரிணமூலில் இணைந்தார். இந்நிலையில், கடந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பேரவை உறுப்பினர் பிரசாத் கெளன்கர், தனது சகோதரர் மற்றும் ஆதரவாளர்களுடன் இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பிரசாத் கூறுயது:

“பாஜகவுக்கு எதிரான கோபத்தை காங்கிரஸ் வெளிப்படுத்த வேண்டும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. அதனால், திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு தருகிறேன்.

தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்தாண்டு நடைபெறும் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.”

மேலும், பிரசாத் இம்மாதம் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்திற்கு பிறகு திரிணமூல் காங்கிரஸின் முறையாக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளுக்கும் பிரசாத் ஆதரவு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.