பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நாட்டில் 7 மாதங்களுக்குப் பின் குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 19,740 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுளள்து. இதன் மூலம், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,36,643 ஆக உள்ளது.

News image

நாட்டில் 7 மாதங்களுக்குப் பின் குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

Updated On :9 அக்டோபர் 2021, 5:38 am


புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 19,740 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுளள்து. இதன் மூலம், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,36,643 ஆக உள்ளது.

நாட்டில் சுமார் 6 மாதங்களுக்குப் பின் அதாவது 206 நாள்களுக்குப் பின், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை இந்த அளவுக்குக் குறைந்திருப்பது இதுவே முதல் முறை.

கரோனா நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 23,070 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,32,48,291 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.98 சதவீதமாக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 12,69,291 கரோனா பரிசோதனை செய்யப்பட்டுளள்து. வாராந்தோறும் கரோனா உறுதியாகும் விகிதம் 1.62 சதவீதமாக உள்ளது. சுமார் 106 நாள்களாக கரோனா உறுதியாகும் விகிதம் 3 சதவீதத்துக்குள் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.