மாவட்ட காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், தற்கொலை செய்து கொண்ட பெண் எழுதிய நான்கு பக்க தற்கொலைக் கடிதத்தில், வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட தனது சகோதரன் பற்றி அக்கம்பக்கத்தாரின் பேச்சுகளால் அவமானம் அடைந்து, அவமரியாதையோடு வாழ விரும்பவில்லை. அவர்கள் எங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்கள். அதனால்தான் இந்த துயர முடிவை எடுக்கிறோம். நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதை தயவுகூர்ந்து காவல்துறையினர் புரிந்து கொள்ள வேண்டும். எனது தந்தையால், மகனை கட்டுப்படுத்த முடியவில்லை. மகன் செய்த தவறுக்கு காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். மகனை சரியாக வளர்க்காததுதான் அவர் செய்த குற்றம் என்று எழுதியுள்ளார்.