ஔரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தங்களது குழந்தைகளை ஈன்றெடுக்க உதவி செய்த செவிலியர், பிரசவத்துக்குப் பிறகான உடல்நலப் பாதிப்புகளால் பலியானது குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஜோதி காவ்லிக்கு, நவம்பர் 2ஆம் தேதி ஹிங்கோலி அரசு மருத்துவமனையில் இரண்டாவது குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு ஏற்பட்ட சில பிரச்னைகளால் ஜோதி மரணமடைந்தார்.
இதையும் படிக்கலாமே.. என்ன இவையெல்லாம் விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளா?
அவர், அதே ஹிங்கோலி அரசு மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில் செவிலியராக பணியாற்றி வந்ததும், தனது பிரசவத்துக்கு முதல்நாள் வரை அங்கு பணியாற்றிவிட்டு, பிறகு பணி முடிந்து நேராக மருத்துவமனையிலேயே பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதையும் குடும்பத்தினர் குறிப்பிடுகிறார்கள்.
இங்கு அவர் 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு வேறொரு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் 3 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.
பிரசவத்துக்குப் பிறகு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக அவர் நான்டெட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.
அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 15 பிரசவங்கள் நடக்கும். அவரது ஐந்தாண்டு பணிக்காலத்தில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு, பிரசவம் பார்த்திருப்பார். ஆனால் இன்று அவர் பிரசவத்தின் போது மரணமடைந்திருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவமனையில் அவருடன் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


