மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கரோனாவை வென்று திரும்பிய 100 வயது தம்பதிக்கு சிறப்பான வரவேற்பு

கர்நாடக மாநிலம் பல்லாரியில் கரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய 100 வயதைக் கடந்த தம்பதிக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

கரோனாவை வென்று திரும்பிய 100 வயது தம்பதிக்கு சிறப்பான வரவேற்பு

Updated On :31 மே 2021, 6:36 am


பல்லாரி: கர்நாடக மாநிலம் பல்லாரியில் கரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய 100 வயதைக் கடந்த தம்பதிக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரோனா பாதித்து சுமார் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய தும்பரகுட்டி கிராமத்தைச் சேர்ந்த இரன்னா (103) - அவரது மனைவி இரவ்வா (101) ஆகியோருக்கு மாலை அணிவித்து, கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

கடந்த வாரம் இந்த முதிய தம்பதிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. வீட்டிலேயே இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். தொடர் சிகிச்சையில் இருவரும் நலமடைந்தனர்.

பல்லாரி மாவட்டம் கரோனா இரண்டாம் அலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிக உயிரிழப்புகளும் நேரிட்டுள்ளன.

இந்த நிலையில் தான் இந்த வயதான தம்பதி, கரோனாவிலிருந்து மீண்டு கிராமத்துக்கு திரும்பியது குறித்து கிராம மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் உற்சாக வரவேற்புக்கு ஏற்பாடு செய்தனர்.

இவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், மற்ற நோயாளிகளைப் போல இவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகவில்லை. காலையிலேயே எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது, மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளை மேற்கொள்வது என்று மிகச் சிறப்பாக செயல்பட்டதாகவும் இவர்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.