ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

யாஸ் புயல்: மத்திய அரசிடம் ரூ.20,000 கோடி நிவாரண நிதி கோரும் மம்தா

மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் யாஸ் புயல் ஏற்படுத்திய சேதங்களை சீரமைக்கும் வகையில் மத்திய அரசு ரூ.20,000 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

News image

யாஸ் புயல்: மத்திய அரசிடம் ரூ.20,000 கோடி நிவாரண நிதி கோரும் மம்தா

Updated On :28 மே 2021, 1:03 pm


மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் யாஸ் புயல் ஏற்படுத்திய சேதங்களை சீரமைக்கும் வகையில் மத்திய அரசு ரூ.20,000 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

திகா பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் குறித்த அறிக்கை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்டுள்து. தற்போதைய நிலவரப்படி, மேற்கு வங்க மாநிலத்தில் ரூ.20,000 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, திகா மற்றும் சுந்தர்பன் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தலா ரூ.10,000 கோடி  நிவாரண நிதி கோரியுள்ளோம் என்றார்.

எங்களுக்கு மத்திய அரசிடமிருந்து உதவி கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியவில்லை. ஆனால், நானும், மாநில தலைமைச் செயலாளரும் பிரதமரை சந்தித்து அவரிடம் வெள்ளச் சேத ஆய்வறிக்கையை அளித்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதிக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.