ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஸ்ரீநகரில் 44 திறந்தவெளி தடுப்பூசி மையங்கள் அமைப்பு

ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் 18-44 வயதுக்குள்பட்டவர்களுக்கு 44 திறந்தவெளி தடுப்பூசி மையங்கள் பல்வேறு இடங்களில் அமைத்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :28 மே 2021, 10:35 am

ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் 18-44 வயதுக்குள்பட்டவர்களுக்கு 44 திறந்தவெளி தடுப்பூசி மையங்கள் பல்வேறு இடங்களில் அமைத்துள்ளது. 

ஸ்ரீநகர் துணை பிரதேச மாஜிஸ்திரேட் ஃபயாஸ் அஹ்மத் பாபா கூறுகையில், 

ஸ்ரீநகர் முழுவதும் 44 திறந்தவெளி தடுப்பூசி முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் தடுப்பூசி போட வற்புறுத்தி வருகிறோம். 
இந்த முகாம்கள் முக்கியமாக ஊடகவியலாளர்கள், கடை வைத்திருப்பவர்கள், ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது. 

மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு வதந்தி பரவியது, ஆனால் இது உண்மையல்ல.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் ஷர்மீன் கூறுகையில், 

நாளொன்றுக்கு 300 பேருக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதுவரை 40 பேருக்குத் தடுப்பூசி போட்டுள்ளோம். மக்கள் ஒத்துழைத்து வருகின்றனர்.

கரோனா பரவுவதைத் தடுப்பதற்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரே கருவியாக இருப்பதால் தடுப்பூசி முக்கியமானது. கரோனா தடுப்பூசி தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவியுள்ள தவறான தகவல்களுக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். 

வதந்திகளை நம்புவதை விட விஞ்ஞான ஆதாரங்களை நாம் பின்பற்ற  வேண்டும் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.