/

கர்நாடகத்தில் ஒரே காலில் 9 விரல்களுடன் பிறந்த குழந்தை: கொண்டாடும் குடும்பம்

கர்நாடக மாநிலம் ஹொசாபெட் பகுதியில் பிறந்த குழந்தையின் ஒரே காலில் 9 விரல்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
கர்நாடகத்தில் ஒரே காலில் 9 விரல்களுடன் பிறந்த குழந்தை: கொண்டாடும் குடும்பம்
Updated On :27 ஜனவரி 2024, 8:19 pm

ENS


கர்நாடக மாநிலம் ஹொசாபெட் பகுதியில் பிறந்த குழந்தையின் ஒரே காலில் 9 விரல்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பிரசவம் பார்த்த மருத்துவர் பாலச்சந்திரன் பேசுகையில், இது மிகவும் அரிதான சம்பவம். ஆனால் குழந்தையும், தாயும் நலமாக இருக்கிறார்கள். இது குறித்து குழந்தையின் குடும்பத்தினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

குழந்தை ஆரோக்கியமாகவே உள்ளது. பல குழந்தைகள் கூடுதலாக கை மற்றும் கால் விரல்களுடன் பிறப்பது வழக்கம்தான். ஆனால், இதில் மிக அரிதாக, ஒரே காலில் 9 விரல்களுடன் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை வளரும் போது இந்த விரல்களுடன் நடக்க பழகிவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த குழந்தை குறித்து குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், இது கடவுள் கொடுத்த வரம் என்று கொண்டாடி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.