மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கர்நாடகத்தில் ஒரே காலில் 9 விரல்களுடன் பிறந்த குழந்தை: கொண்டாடும் குடும்பம்

கர்நாடக மாநிலம் ஹொசாபெட் பகுதியில் பிறந்த குழந்தையின் ஒரே காலில் 9 விரல்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

கர்நாடகத்தில் ஒரே காலில் 9 விரல்களுடன் பிறந்த குழந்தை: கொண்டாடும் குடும்பம்

Updated On :28 மே 2021, 9:48 am


கர்நாடக மாநிலம் ஹொசாபெட் பகுதியில் பிறந்த குழந்தையின் ஒரே காலில் 9 விரல்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பிரசவம் பார்த்த மருத்துவர் பாலச்சந்திரன் பேசுகையில், இது மிகவும் அரிதான சம்பவம். ஆனால் குழந்தையும், தாயும் நலமாக இருக்கிறார்கள். இது குறித்து குழந்தையின் குடும்பத்தினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

குழந்தை ஆரோக்கியமாகவே உள்ளது. பல குழந்தைகள் கூடுதலாக கை மற்றும் கால் விரல்களுடன் பிறப்பது வழக்கம்தான். ஆனால், இதில் மிக அரிதாக, ஒரே காலில் 9 விரல்களுடன் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை வளரும் போது இந்த விரல்களுடன் நடக்க பழகிவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த குழந்தை குறித்து குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், இது கடவுள் கொடுத்த வரம் என்று கொண்டாடி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.